மட்டக்களப்பில் மின்னல் தாக்கி உயிரிழந்த கடற்றொழிலாளரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு- கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் மின்னல் தாக்கிய நிலையில் காணாமல்போன கடற்றொழிலாளரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முகத்துவாரம் பகுதியில் நேற்றுமுன் தினம் மாலை மின்னல் தாக்கி மூன்று கடற்றொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் கடற்றொழிலாளர் ஒருவர் காணாமல்போயிருந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இடியுடன் கூடிய கடும் மழைபெய்து வருகின்றது. மூன்று பிள்ளைகளின் தந்தை இந்த நிலையில் முகத்துவாரம் ஆற்றுவாய் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்களை மின்னல் தாக்கியுள்ளது. இதன்போது காணாமல்போன கடற்றொழிலாளர் திராய்மடு மூன்று பிள்ளைகளின் தந்தையான 54வயதுடைய … Continue reading மட்டக்களப்பில் மின்னல் தாக்கி உயிரிழந்த கடற்றொழிலாளரின் சடலம் மீட்பு!